Tuesday, June 25, 2013

எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் -2012

அனுராதபுரம் வான்படைத் தளத்தில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படைத் தளம் மீது “எல்லாளன்” என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் மேலும் பல வானூர்திகள் சேதமாக்கப்பட்டன.

பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.


அவர்களின் விபரம் வருமாறு:


லெப்.கேணல் வீமன் 
(கோபாலபிள்ளை பிரதீபன் - திருகோணமலை)

லெப். கேணல் இளங்கோ 
(இராசதுரை பகீரதன் - யாழ்ப்பாணம்)

லெப். கேணல் மதிவதனன் 
(பாலசுப்பிரமணியம் தயாசீலன் - யாழ்ப்பாணம்)

மேஜர் சுபன் 
(கதிரவன் ஜீவகாந்தன் - யாழ்ப்பாணம்)
மேஜர் கனிக்கீதன் 
(இராசன் கந்தசாமி - மட்டக்களப்பு)

மேஜர் இளம்புலி 
(துரைரட்ணம் கலைராஜ் - யாழ்ப்பாணம்)

மேஜர் காவலன் 
(சண்முகம் சத்தியன் - கிளிநொச்சி)
மேஜர் எழிலின்பன் 
(விமலநாதன் பிரபாகரன் - யாழ்ப்பாணம்)
கப்டன் தர்மினி 
(கணேஸ் நிர்மலா - கிளிநொச்சி)

கப்டன் புரட்சி 
(செல்வராசா தனுசன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கருவேந்தன் 
(மயில்வாகனம் சதீஸ்குமார் - கிளிநொச்சி)

கப்டன் புகழ்மணி 
(தர்மலிங்கம் புவனேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் புலிமன்னன 
(கணபதி நந்தகுமார் - யாழ்ப்பாணம்)

கப்டன் அன்புக்கதிர் 
(வில்சன் திலீப்குமார் - முல்லைத்தீவு)

கப்டன் சுபேசன் 
(நாகராசா மகாராஜ் - மன்னார்)

கப்டன் செந்தூரன் 
(கணேசநாதன் தினேஸ் - யாழ்ப்பாணம்)

கப்டன் பஞ்சீலன் 
(சிவானந்தம் கஜேந்திரன - மட்டக்களப்பு)

கப்டன் ஈழப்பிரியா 
(கந்தையா கீதாஞ்சலி - யாழ்ப்பாணம்)

கப்டன் அருள்மலர் 
(சேவியர் உதயா - யாழ்ப்பாணம்)

கப்டன் ஈழத்தேவன் 
(தங்கராசா மோசிகரன் - யாழ்ப்பாணம்)
லெப். அருண் 
(பத்மநாதன் திவாகரன் - யாழ்ப்பாணம்)
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.

No comments:

Post a Comment