Tuesday, June 25, 2013

கப்டன் பண்டிதர் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள்!

09.01.1985 அன்று யாழ். ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகைக்கு எதிராக தீரமுடன் களமாடி வரலாறாகிய கப்டன் பண்டிதர்(இளங்கே) உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
 
நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினருடன் தீரமுடன் களமாடி தமது தோழர்கள் தப்பிச்செல்ல வழியேற்படுத்திக்கொடுத்து
 
கப்டன் பண்டிதர்/இளங்கோ (சின்னத்துரை ரவீந்திரன்  - கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
 
வீரவேங்கை நேரு (செல்லையா தில்லைச்சந்திரன் - கச்சேரி,  யாழ்ப்பாணம்.)
 
வீரவேங்கை கராட்டி ரவி/ராஜீவ் (சோமசுந்தரம் பிரதாபன் - நல்லூர், யாழ்ப்பாணம்.)
 
வீரவேங்கை சாமி (ஆறுமுகம் தவரத்தினம் - ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்.)
 
வீரவேங்கை தவம் (நடேசு தவராசா - அச்சுவெலி தெற்கு, ஆவரங்கால், யாழ்ப்பாணம்.)
 
வீரவேங்கை சிவா (சிவகுரு சிவேந்திரன் - அச்சுவெலி தெற்கு, ஆவரங்கால், யாழ்ப்பாணம்.)
 
ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
 
தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

No comments:

Post a Comment